ஜியோ மற்றும் ஏர்டெல் தங்களுடைய வாடிக்கையாளருக்கு மிகப்பெரிய ஒரு அதிர்ச்சி செய்தியை அறிவித்துள்ளது. இன்றைய தேதி வரையில் அன்லிமிடெட் 5 ஜி சேவையைஜியோ மூலம் பெற்றுக் கொண்டிருக்கிறோம். மிக மலிவான விலையில் டேட்டா சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஜியோவே மிக முக்கிய காரணம். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் பல்வேறு இடங்களில் ஜியோ தனது 5G சேவையை இலவசமாக வழங்க ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து ஏர்டெல்லும் தனது வாடிக்கையாளர்களுக்கு 5G வழங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் இது நிரந்தரமல்ல அதற்கான ஒரு முற்றுப்புள்ளி வைக்க தொலைதொடர்கள் முடிவு செய்துள்ளது.
5G இலவச சேவை நிறுத்தம்

குறைந்தபட்சம் 349 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ,2GB டேட்டாவை 4G பயன்படுத்தலாம் அதே போல் 5G சேவையை இலவசமாக அன்லிமிடெட் பயன்படுத்திக் கொள்ளலாம். இது ஏர்டெல் மற்றும் ஜியோ விற்கு பொருந்தும். ஆனால் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகும் நிலையில் இந்த சேவையை இப்பொழுது இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் அன்லிமிடெட் சேவையை
நிறுத்தப் போவதாக அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.
Jio-ல டேட்டா வேண்டாம்… Calls மட்டும் போதும்! பல பேருக்கு தெரியாத ரீசார்ஜ் பிளான்
அதன்படி அன்லிமிடெட் சேவைக்கு பதிலாக புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகப்படுத்தலாம். அந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே உங்களால் 5ஜி சேவையை பயன்படுத்தும் எனவும் இதன் கட்டணம் சாதாரண கட்டணத்தை விட சற்று அதிகமாக இருப்பதற்கும் வாய்ப்புள்ளது. அதிக முதலீடுகள் மற்றும் செலவினம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளது.
இது இன்னும் சில மாதங்களிலேயே நம்மளுக்கும் வரும் எனவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஏற்கனவே வோடபோன் மற்றும் ஐடியா அன்லிமிடெட் 4G சேவைக்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஏற்கனவே. இது வாடிக்கையாளர்களுக்கு சற்று அதிர்ச்சி கொள்ளான செய்தி தான். மேலும் இவற்றின் ரீச்சார்ஜ் திட்டம் பற்றி கூடிய விரைவில் செய்திகள் வெளி வரலாம்.










