திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் ஜூன் 5ஆம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு உட்பட்ட கம்பரசம் பேட்டை தலைமை நீர் பணி நிலையம் டர்பன் நீரேற்ற நிலையம் ஆகிய நீரற்ற நிலையிலிருந்து செல்லும் பிரதான குடிநீர் குழாய்களுக்கு குடமுறட்டு அருகே ஸ்டார் சிட்டி திட்டத்திற்கு கீழ் புதிதாக பதிக்கப்பட்ட குடிநீர் உந்து குழாயை இணைக்க வேண்டி இருப்பதால் இப்படி 4-6-26 அன்று நடைபெற உள்ளது.
குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்

அதனால் கம்பரசன் பேட்டை தலைமை நீர் பணி நிலையம் டர்பன் நீரேற்று நிலையம் ஆகிய நிலையத்திலிருந்து விறகுபேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி போன்ற பகுதிகளில் நீர் தேக்க தொட்டிகளுக்கு வழங்கக்கூடிய குடிநீர் ஆனது நாளை 05-06-26 ஒரு நாள் மட்டும் குழாய் இணைப்பு காரணமாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மீண்டும் 6-6-26 அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனவும் பொதுமக்கள் இதனால் தங்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் குடிநீர் சிக்கனமாக பயன்படுத்த மாவட்ட ஆணையர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.





