இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கும் இது பொருந்தும். தங்களுடைய இந்தியன் வங்கி கணக்கில் சரியான முறையில் eKYC புதுப்பிக்க வேண்டும் என இந்தியன் வங்கி அறிவித்திருக்கிறது.
இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிலரால் தங்களுடைய பணத்தை நேரடியாக வங்கியில் இருந்து பெறுவதற்கோ அல்லது வங்கி கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதற்கோ முடியாமல் இருக்கும் பட்சத்தில் அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு இது பொருந்தும்.
Jio-ல டேட்டா வேண்டாம்… Calls மட்டும் போதும்! பல பேருக்கு தெரியாத ரீசார்ஜ் பிளான்
பணம் எடுக்க மற்றும் டெபாசிட்
தங்களுடைய வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கோ அல்லது வங்கி கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதற்கோ eKYC புதுப்பி அவசியம். இதை செய்யாமல் இருக்கும் பட்சத்தில் உங்களால் வங்கியில் இருந்து அதாவது ஆன்லைன் வழியாக அல்லாமல் வங்கியில் இருந்து நேரடியாக பணத்தை பெறுவதோ அல்லது பணத்தை டெபாசிட் செய்வதற்கு சாத்தியக்கூறு குறைவு. அதனால் முடிந்த வரையில் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் ஆதார் கார்டை கொண்டு eKYC புதுப்பிக்க வேண்டும்.
ஆதாரம் மற்றும் பான் கார்டு

வங்கிக்கு செல்லும் பொழுது தங்களுடைய ஆதார் கார்டு ஜெராக்ஸ் மற்றும் பான் கார்டு ஜெராக்ஸ் ஆகியவற்றை வங்கி புத்தகத்துடன் இணைத்து உங்களுடைய கைரேகை மற்றும் உங்களுடைய புகைப்படம் ஆகியவற்றை உறுதி செய்து பிறகு 5 முதல் 10 நிமிடங்கள் உங்களுடைய வங்கியில் மீண்டும் பரிவர்த்தனை செய்ய ஆரம்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்
- ஆதார் கார்டு ஜெராக்ஸ்
- பான் கார்டு ஜெராக்ஸ்
- வங்கி புத்தகம்
வங்கி கணக்கின் உரிமையாளர் தான் eKYC செய்வது சாத்தியமாகும்.










