கோயம்புத்தூர் மாவட்டத்தில் தற்பொழுது பருவமழை தொடங்க ஆரம்பித்து விட்டது அங்கங்கே மின்தடை மின்கம்பங்கள் பழுது அல்லது மின்சார விநியோகம் பாதிப்பு மழைப்பொழிவு காரணமாக பாதிப்பு போன்ற பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அதனைச் சார்ந்த புகார்கள் அளிக்க மாவட்ட நிர்வாகம் தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
திருச்சி மக்களே அலர்ட்! இனி சிலிண்டர் வாங்க இந்த ஒரு விஷயம் கண்டிப்பா வேணும்! என்ன தெரியுமா?
TNEB டிஎன்இபி மொபைல் அப்ளிகேஷன்
பொதுமக்கள் தங்கள் ஸ்மார்ட் போன் மூலமாக கூகுள் பிளே ஸ்டோர் பயன்படுத்தி TNEB மொபைல் ஆப் பதிவிறக்கம் செய்து உங்களுடைய கோரிக்கையை புகார்களையும் அரசுக்கு தெரியப்படுத்தலாம். மின்கட்டண விவரங்கள் சரிபார்ப்பு, மின்சார புகார்கள், மேலும் தற்போது புகார் செய்த புகாரின் நிலை குறித்து அறிய இவற்றை அனைத்திற்கும் இந்த அப்ளிகேஷன் மூலமாக தீர்வு காண முடியும்.
மின்வாரிய கட்டணமில்லா தொலைபேசி எண்
94987 94987 உங்களிடம் ஆண்ட்ராய்டு போன் இல்லாமல் கீபோர்ட் போன் மட்டும் தான் பயன்படுத்தினாலும் கவலை இல்லை. உங்களுக்காக 24 மணி நேரம் செயல்படும் புகார் அளிக்க பிரத்தியேக தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. 94987 94987 இந்த எண்ணை பயன்படுத்தி கோவை மாவட்ட பொதுமக்கள் அவசர உதவி எண்ணாக பருவமழை காலங்கள் ஏற்படும் மின் பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் இந்த ஒரு செய்தியை உங்களுடைய நண்பர்கள் whatsapp மற்றும் பேஸ்புக் குரூப்புகளில் ஷேர் செய்து மின்வெட்டு இல்லாத மாவட்டமாக கோயம்புத்தூரில் மாற்றுவோம்.






