கடந்த சில மாதங்களாகவே ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் காரணமாக பல்வேறு நாடுகளில் டீசல் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு விலை ஏற்றம் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்கள் விலை ஏற்றம் தட்டுப்பாடு இருந்து வந்தது. இப்பொழுது போர் பதற்றம் ஓரளவுக்கு முடிவுக்கு வந்துள்ளது.
பெட்ரோல் விலை ஏற்றம்

தமிழகத்தைப் பொறுத்தவரையில் 103 ரூபாய் இருந்த பெட்ரோல் விலை இன்று 109 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் விலை இன்று 101 ரூபாய் விற்கப்பட்டு வருகிறது. இது இந்திய ஆயில் நிறுவனங்கள் போர் பதற்றத்தின் காரணமாக விலையற்றம் செய்திருந்தது. ஆனால் நயாரா பெட்ரோல் பங்குகளில் கிட்டத்தட்ட மற்ற பங்குகளை காட்டிலும் ஐந்து ரூபாய் பெட்ரோல் அதிகமாகவும் மூன்று ரூபாய்க்கு டீசல் அதிக விலைக்கும் விற்கப்பட்டிருந்தது. இது கடந்த மார்ச் மாதம் முதல் அமலுக்கு வந்திருந்த நிலையில் இப்பொழுது பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்தது நயரா பங்குகள்.
பெட்ரோல் விலை குறைப்பு
இந்திய முழுவதும் உள்ள 7000 நயாரா பெட்ரோல் பங்க்களில் பெட்ரோலுக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 3 ரூபாயும் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக நயாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.











