மீண்டும் வாட்டி வதைக்கும் வயநாடு நிலச்சரிவு. கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பல இடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிடங்கள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இவை அனைத்தும் அடித்து செல்லப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த 2024ம் ஆண்டு இது ஜூலையில் பெருமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பல இடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிய பல உயிர் சேதங்களும் ஏற்பட்டது. மக்கள் மீண்டும் தங்களுடைய பழைய நிலைமைக்கு மீளாத நிலையில் இருந்து வந்துள்ளன.
இந்நிலையில் கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் வயநாட்டில் தற்போது மீண்டும் கன மழை கொட்டி வருகிறது. அதன்படி, வயநாடு மாவட்டம் மேப்பாடி பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மேப்பாடி அருகே கல்லடி இரட்டை சுரங்கப்பாதை கட்டுமானம் நடந்து வருகிறது. இந்த கட்டுமானப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பலர் மண்ணுக்கு அடியில் சிக்கினர். இதுவரை 6 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் 18 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை இது எல் நினோ அறிகுறியாக இருக்கலாம் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன. வயநாட்டை பொருத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் 265 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது







