தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஆடி 18 . அதாவது ஆடிப்பெருக்கு என்பது மிகவும் முக்கியமான நாளாகும். தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றாகும். இந்த ஆடிப்பெருக்கு மங்களமாக நாளாக கருதப்படுகிறது. அதனால் ஆடி மாதத்தில் சுப காரியங்கள் செய்வது தவிர்த்தாலும் சுப காரிய பேச்சுக்களை துவக்கவும் புதிய முயற்சிகளை துவக்கும் ஏற்ற நாளாக ஆடிப்பெருக்கு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு எப்பொழுது?
தமிழ் மாதத்தின் ஆடி மாதம் 18ம் நாள். ஆடி 18 அல்லது ஆடிப்பெருக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த 2026 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. புதுமண தம்பதிகள் தாலி கயிறு மாற்றுவது, கடல் நீரில் நீராடுவது இப்படி பல்வேறு ஊர்களில் பல்வேறு விதமான பாரம்பரிய நிகழ்ச்சிகள் இந்த நாளில் நடைபெறும்.
ஆடி 18 அரசு விடுமுறையா? தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! எந்தெந்த மாவட்டங்களுக்கு லீவு?








