நடிகர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் இந்த வருடத்தின் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படுவதாக படக்குழுவினர் தெரிவித்து இருந்தது. ஆனால் பண்டிகைக்கு முன்பாக இந்த படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாததால் படம் ரிலீஸ் செய்யப்படவில்லை. மேலும் புக்கிங் செய்யப்பட்ட டிக்கெட்கள் அதற்கான பணம் வேண்டும் ரசிகர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் மத்திய அரசின் கீழ் சென்சார் சான்றிதழ் வழங்க கோரி தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டது.

நீதிமன்றத்தின் தீர்ப்பின் சார்பாக அமையாததால் ஜனநாயகன் படத்தின் வெளியிட்டு தேடி ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவித்த படக்குழுவினர், சென்சார் சான்று கோரி சென்சார் போர்டு பரிந்துரை படி படத்தின் சர்ச்சுக்குரிய சில காட்சிகள் நீக்கப்பட்டு இருந்ததாகவும் இதனால் படத்தின் நீளம் 20 நிமிடங்கள் வரை குறைக்கப்படும் எனவும் சொல்லப்பட்டது. இதனை தொடர்ந்து ஜனநாயகன் படம் வருகின்ற பிப்ரவரி 20ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கண்டிப்பாக இந்த முறை ஜனநாயக திரைப்படம் திரையரங்குக்கு வரும் என நம்பிக்கையோடு மற்றும் வெறித்தனமாக காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்.











