ஜனவரி மாதத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை
ஜனவரி மாதத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை புதிய உச்சத்தை தொட்டது. இந்த வருடத்தின் ஜனவரி மாதம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை தங்கத்தின் விலை Rs. 27,280 ரூபாய் அதிகரித்துள்ளது. அதேபோல் வெள்ளியின் விலை ஜனவரி மாதத்தில் மட்டும் கிலோவிற்கு Rs.1,67,000 அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்றைய தங்க விலை நிலவரம்
இரண்டாவது நாளாக தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை. இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 7600 ரூபாய் குறைந்துள்ளது. எனவே ஒரு சவரன் தங்கம் 1,19,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.எனவே தங்கம் வெள்ளி வாங்குவதற்கு இதுவே சிறந்த நேரம் எனவும் கூறப்படுகிறது.
| தங்கம் வகை | 1 கிராம் | 8 கிராம் | 10 கிராம் |
| 22 கேரட் கோல்ட் | ₹14,900 | ₹1,19,200 | ₹1,49,000 |
| 24 கேரட் கோல்ட் | ₹16,255 | ₹1,30,040 | ₹1,62,550 |
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளியின் விலை ஒரே நாளில் ஒரு கிலோவிற்கு ரூபாய் 55000 குறைந்துள்ளது.
- இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் ₹350
- இன்று ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூபாய் ₹3,50,000
எதிர்காலத்தில் வெள்ளி விலை எப்படி இருக்கும்

பொருளாதார வல்லுனர்களின் கணிப்பின்படி மூன்று மாதங்களில் வெள்ளியின் விலை ரூபாய் 13,783 ஆக இருக்கும் என CITI நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 443 ஆக உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சில ஆய்வாளர்கள் நேர்மறையாக கூறியுள்ளனர். சில ஆய்வாளர்கள் வெள்ளியின் விலை உயர்வு நிரந்தரம் இல்லை என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் வெள்ளியின் விலை 50% வரை குறைய கூடும் எனவும் கூறியுள்ளனர்.
ஏனெனில் தொடர்ந்து வெள்ளியின் விலை அதிகரிப்பதால் சாதாரண மக்கள் வெள்ளியை வாங்க தயக்கம் காட்டுவார்கள். எனவே வெள்ளியின் அதிகப்படியான தேவை குறைந்து வெள்ளியின் விலை குறையக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
என்னதான் வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் முதலீட்டாளர்கள் கண்கள் தங்கத்தின் மீதுதான் உள்ளது.
இந்த நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டில் தங்கத்தின் விலை ரூபாய் 18,319 வரை உயரும் என்று UBS வங்கி தெரிவித்துள்ளது.அதேசமயம் இந்த நிதியாண்டின் இறுதியில் தங்கத்தின் விலை சரிவை சந்திக்கும் எனவும் கூறப்படுகிறது.
தங்கத்தின் விலை கிராமிற்கு 17, 736 வரை அதிகரிக்கும் எனவும் duetsche வங்கி தெரிவித்துள்ளது.பெரும்பாலான நிறுவனர்கள் மற்றும் வங்கிகள் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படும் என தெரிவித்துள்ளனர்.
எனவே தங்கத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பாக இருக்கும் எனவும் பெரும்பாலான வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.







