போகி பண்டிகை,, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், மற்றும் காணும் பொங்கல் இதை யாவும் தமிழர்களால் பல ஆண்டுகளாக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் பண்டிகை தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாக உலகிற்கு எடுத்துச் சொல்லும் நாள்தான் தைத்திருநாள். அல்லது பொங்கல் திருநாள் இப்படி பல பெயர்கள் உள்ளது.

தமிழ்நாடு மட்டும் அல்லாமல் உலகின் மூலம் வரும் தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்படும் வரும் இந்த தை திருநாளில் , வீட்டு வாசலில் கோலமிட்டு, புது ஆடைகள் உடுத்தி குடும்பங்கள் மற்றும் சொந்தங்கள் அனைத்தும் கூடி தைத்திருநாளை வரவேற்கும் இந்த பொங்கல் பண்டிகை.
எப்பொழுது பொங்கல் பண்டிகை?
ஒவ்வொரு வருடமும் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறோம். இந்த வருடம் 2026 ஜனவரி15 புதன்கிழமை தைப்பொங்கலை கொண்டாடலாம்.
பொங்கல் வைக்க நல்ல நேரம்? Pongal Vikka Nalla Neram
🕢 காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை
🕥 காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை
🕛 நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை
எந்த திசையில் பொங்கல் வைக்கலாம்
தைப்பொங்கல் அன்று வீட்டு வாசலில் மண் அடுப்பு வைத்து அல்லது மண் உருண்டை வைத்து பொங்கல் இடுவது வழக்கம். அப்படி கிழக்கு பக்கம் அடுப்பு முகப்பு இருக்கும் வைத்து வழிபடுவது உகந்தது. இது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் சூரிய பகவானின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.







