கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 06-01-2026 ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி மாதாந்திர பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் 6 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் ஓசூர் பகுதிகளில் மின்தடை ஏற்படும் அதற்கான முன்னெச்சரிக்கையை மக்கள் எடுப்பது முக்கியம்.
ஒசூர்
டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், கொத்தூர், கொத்தகண்டப்பள்ளி, பொம்மாண்டப்பள்ளி, முனீஸ்வர் நகர், துவர்கா நகர்.
போச்சம்பள்ளி

போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டப்பள்ளி, கோட்டப்பட்டி, வடமலம்பட்டி, பன்னந்தூர், மஞ்சமேடு, சாமண்டபட்டி, பரியப்பறையூர், வண்டிக்காரன்கோட்டை.
பத்தலப்பள்ளி
சிப்காட் கட்டம் -2, பத்தலப்பள்ளி, குமுதேப்பள்ளி, வெல்ஃபிட் சாலை
மின்தடை நேரத்தில் இத பண்ணுங்க
- மின் மோட்டார் மூலம் வீட்டுக்கு தேவையான தண்ணீரை சேமித்து வைப்பது அவசியம்.
- வீட்டில் இருந்து வேலை செய்ய நபர்கள் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் ஃபோனிற்கு காலை 9 மணிக்கு முன்பு சார்ஜ் நிரப்புவது முக்கியம்.
- ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்பில் பவர் சேவிங் மோடு எனபல் செய்ய வேண்டும்.
- சமையல் அறையில் இயங்கக்கூடிய சாதனங்களை முன்கூட்டியே பயன்படுத்திக் கொள்வது அவசியம்.







