தங்களுடைய நீண்ட கால கோரிக்கையை ஏற்று தமிழக அரசு மதுரை மாநகராட்சிக்கு 6,150 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீர் செல்வதற்கான வழிகளும் மற்றும் பாதாள சாக்கடையை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் திட்டம் உள்ளிட்ட குடிநீர் வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகளுக்கும் இந்த நிதி ஒதுக்கப்படும் எனவும் மதுரை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளனர். இந்த திட்டக் கருவுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு செய்தது மதுரை மாநகராட்சி மக்களுக்கும் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றன.








