தமிழர்களின் முக்கியமான பண்டிகை பொங்கல். இந்த பொங்கலுக்கு மற்றும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு மூலம் பொங்கல் பரிசு தொகை வழங்குவது வழக்கம். அந்த பரிசு தொகையில் ரொக்க பணம், சர்க்கரை, கரும்பு, மற்றும் அரிசி போன்றவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

2026 ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக இந்த வருடம் பொங்கல் பரிசு தொகை 5000 மற்றும் என எதிர்பார்த்து இருந்தன. ஆனால் இந்த வருடம் பொங்கல் பரிசு தொகை அறிவிப்பின்பொழுது முதலமைச்சர் ரொக்க பணம் வழங்கப்படும் என்பதை பற்றி தெரிவிக்கப்படாத நிலையில் மக்களுக்கு மிகவும் ஏமாற்றம் அடைந்தன.
அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம்
அரசு ஊழியர்களுக்கு மட்டும் இந்த பொங்கல் பண்டிகையை வரவேற்கும் வகையில் 50 சதவீத ஓய்வுதியும் வழங்கப்படும் என்று அறிவிப்பை நேற்று அறிவித்திருந்த நிலையில், தமிழக மக்களுக்கு குறைந்தபட்சம் தொகையாவது பொங்கல் பரிசு தொகையில் இடம்பெறாதா என எதிர்பார்த்து இருந்த நிலையில் இன்று முக்கிய அறிவிப்பை அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
பொங்கல் பரிசு 3000
நேற்றைய தினம் அரசு ஊழியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை அறிவித்த முதலமைச்சர் இன்று தமிழக மக்கள் கிட்டத்தட்ட 2.27 கோடி கோடி ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு தொகையாக 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்காக தமிழக அரசு 6.810 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொங்கல் பண்டிகைக்கு 5000 வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் பரிசு தொகை
ஏற்கனவே பொங்கல் பரிசு தொகை அறிவிப்பின்படி ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றை தொகுப்பு ஆக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது இதற்காக அரசுக்கு 248 கோடி ரூபாய் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது
டோக்கன் விநியோகம்
மேலும் ஏற்கனவே கூறியது போல் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வினியோகம் வருகின்ற 8 தேதி முதல் முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.









